Archive for ஜூன் 1st, 2008
நேரத்தை வீணாக்காதோர் சங்கம்
நான் சமீபத்தில் படித்து ரசித்தது இது:
உலகம் என்ன சொல்லும் என்று கவலைபடாதே
உன் மனதிற்கு சரி என்று பட்டால் மட்டும் ………..குளி.
இப்படிக்கு
குளித்து நேரத்தை வீணாக்காதோர் சங்கம்.
இப்படி நிஜத்தில் இருப்பார்கள் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது, இந்த மாம்பழ சோம்பேறிகள் (எத்தனை நாட்களுக்குத்தான் வாழைபழத்தை இழுப்பது) அறிமுகம்கிடைக்கும் வரை.
ஒரு அறையில் நாலு நபர்கள் குடியிருந்தார்கள். அதனால் நாலு மெத்தை கீழே (கட்டில் கிடையாது) இருக்கும். அதன் மேல் ஒவ்வொரு தலையணையும், போர்வையும் எப்போதும் விரித்து வைக்கபட்டிருக்கும். வேலை முடிந்து வந்தவுடன் அதிலே உண்டு, அப்படியே படுத்துக்கலாம் என்றுதான்.
படுக்கையை காலை எழுந்ததவுடன் சுருட்டி வைக்கவும், மாலை வந்தவுடன் விரிக்கவும், எதற்காக நேரத்தை செலவிடவேண்டும்? என்பது அவர்களுடைய கேள்வி. எல்லாம் நம்ம நேரம் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமென்று.
2 comments ஜூன் 1, 2008