ஊசி
ஆகஸ்ட் 31, 2008
கண்மணிக்கு இப்போது இரண்டு வயது எட்டு மாதம் ஆகிறது.
தடுப்பு ஊசி போட மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். கண்மணியைவிட நான் தான் ரெம்ப டென்ஷனாக இருந்தேன்.
போகும் வழியில் “கண்மணி லேசாத்தான் வலிக்கும் பயப்படகூடாது, அழக்கூடாது. இந்த ஊசி போட்டா காச்சல் வராது, சளி பிடிக்காது …..” என்று பெரிய பில்டப் கொடுத்து கொண்டிருந்தேன் .
அவள் வழக்கம் போல் “எல்லாம் எனக்கு தெரியும் சும்மா லொட லொடகாதம்மான்னு ” என்னை ஒரு லுக்விட்டாள்.
நானும் “அங்கே போய் உன்னை எப்படி சமாளிக்க போகிறேனோ ?” என்று மீண்டும் கவலை பட ஆரம்பித்தேன்.
மருத்துவமனையில் , தடுப்புஊசி போடும் இடத்தில் “கிச்….வீசென்று ஒரே சப்தம். கண்மணி ஏதோ ஒரு திகில் படம் பார்க்கிற மாதிரி முகத்தை வைத்து கொண்டாள்.
எங்களுடைய முறையும் வந்தது. நர்ஸ் ஊசியில் மருந்தெடுப்பதை, புருவத்தை நெரித்து சீரியஸாக பார்ப்பதை பார்த்தால் , என்னமோ எல்லாம் சரியாக பண்ணுகிறார்களா என்று செக் பண்ணுவது போல் இருந்தது.
நர்ஸ் ” cute baby” என்று ஒரு அழகாக புன்னகைத்துக்கொண்டே சுருக்கென்று சொருகிவிட்டார்கள். கண்மணியோ, அழாமல் சீரியஸாக குனிந்து ஊசி போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பஞ்சு வச்சு ஊசி போட்ட இடத்தை துடைத்த பிறகு, நார்மலாகி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நர்சை பார்த்து என்ன சொன்னாள் தெரியுமா?
‘
‘
‘
‘
‘
‘
‘
‘
” Thank you nurse”
Entry Filed under: கண்மணியின் பூங்கா. குறிச்சொற்கள்: கண்மணி.
10 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Vijay | ஆகஸ்ட் 31, 2008 at 9:21 மு.பகல்
சில தினங்களுக்கு முன் தடுப்பூசியால் குழந்தைகள் இறந்த பிறகு, இந்தத் தடுப்பூசியை எந்தக் குழந்தைக்காவது போடுகிறார்கள் என்று கேட்டாலே மனம் பதறுகிறது.
2.
முகுந்தன் | செப்டம்பர் 1, 2008 at 5:19 மு.பகல்
நாம் குழந்தைகளிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.
3.
kunthavai | செப்டம்பர் 1, 2008 at 7:05 மு.பகல்
//இந்தத் தடுப்பூசியை எந்தக் குழந்தைக்காவது போடுகிறார்கள் என்று கேட்டாலே மனம் பதறுகிறது.
//
என்ன செய்ய, அப்படி ஒரு காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
4.
kunthavai | செப்டம்பர் 1, 2008 at 7:06 மு.பகல்
//நாம் குழந்தைகளிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.//
நன்றி முகுந்தன். சில நேரங்களில் பெரிய மனுஷி மாதிரி செயல்படும்போது சந்தோஷமாக இருக்கின்றது , அதுவே சில சமயங்களில் இடைஞ்சலாக உள்ளது.
5.
Ramya Ramani | செப்டம்பர் 2, 2008 at 7:20 பிற்பகல்
Cho Chweet Kanmani
6.
kunthavai | செப்டம்பர் 3, 2008 at 6:03 மு.பகல்
Thank U ramya.
அடிக்கடி வாருங்கள். உங்கள் கருத்துக்களை தெளித்துவிட்டு செல்லுங்கள்.
7.
பிரியமுடன் ப்ரபு | செப்டம்பர் 11, 2008 at 11:26 பிற்பகல்
soo sweet
8.
குந்தவை | செப்டம்பர் 15, 2008 at 11:56 மு.பகல்
soo sweet//
thank U.
9.
shardha | செப்டம்பர் 30, 2008 at 8:43 மு.பகல்
அடி தங்கமே
10.
kunthavai | அக்டோபர் 6, 2008 at 4:22 மு.பகல்
Welcome and Thank you Sharada.