Archive for ஜூலை 9th, 2009

எனக்கும் சீரியஸா பேசத்தெரியும்.

               ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். வீட்டுக்குள் போய் பார்த்தால் தான் தெரியும். அதையும் தாண்டி தான் ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் போராடி  நொந்து நூலாகி முத்தெடுக்கிறார்கள்.

                              ஆனால் இந்த போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையில் ருசியே இருக்காது. சாபமாக மாறிவிடும். 

                              கண்மணி சில சமயங்களில் எதையாவது இண்டு இடுக்கில் வளைந்து நெளிந்து எடுக்க முயற்சிப்பாள். நான் அய்யோ பாவம் என்று எடுத்து கொடுத்தால் உருண்டு புரண்டு அழ ஆரம்பித்துவிடுவாள். திரும்பவும் நான், அதை அந்த இடத்தில் வைத்தால் தான் அவளுக்கு நிம்மதி வரும். திரும்பவும் அதை விடாபிடியாக முயற்சி செய்து எடுத்தபிறகு ஒரு வெற்றி சிரிப்பு சிரிப்பாள் பாருங்கள்…. அது தான் சந்தோஷம்.

                           இந்த மாதிரி குணம் பொதுவாக நிறைய குழந்தைகளிடம் இருப்பதை பார்க்கலாம். அப்புறம் வளர வளர அந்த மாதிரி குணங்கள் எல்லாம் எங்கே யாரால் தூக்கி எ|றியப்படுகிறது?  எதற்கெடுத்தாலும் அம்மா தான் செய்யவேண்டும், அப்பாதான் செய்யவேண்டும் அது அவர்கள் கடமை மாதிரி நமக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அவங்க செய்யாவிட்டால் அவ்வளவுதான்…. ஒரே கூப்பாடு… கோபம்…

                       சின்ன சின்ன போராட்டங்கள் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. வளர வளர பிரச்சனைகளும் பெரிதாக வளர ஆரம்பித்துவிடுகிறது பெரிய சவாரஸ்யங்களை தருவதற்காக.  இது தான் இயற்கையின் நியதி.

                      என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவார், ‘சைக்கிளில் போயிட்டிருக்கும் போது கீழே விழுந்தால் கொஞ்சமா அடிபடும் . அதுவே பைக்கில் போகும் போது விழுந்தால் இன்னும் கொஞ்சம் பலமா அடிபடும். இன்னும் மேல போய் விமானத்தில் போயிட்டிருக்கும் போது விழுந்தால் நான் சொல்லவேண்டியதில்லை. அது போல காசு, பணம், படிப்பு என்று எல்லாவற்றிலும் மேலப் போகணும் என்று ஆசைப் படுவது நல்லது, அதே நேரத்தில் பிரச்சனைகளும்  பெருசாத்தான் வரும். அதை எதிர்கொள்வதற்கும் நீ தயாரா இருக்கணும்’  (எனக்கு இதெல்லாம் அப்பவே தெரியும்…  அதனாலத் தான் ரெம்ப படிக்கெல )

                       சில நேரங்களில்,   ‘என்ன இது சும்மா ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு வந்து உயிரை வாங்குது.. ஒரு முடிவே கிடையாதா’  என்று மனது  சோர்ந்து போகும் போது புத்தகங்கள்  , நண்பர்கள்  வாயிலாக நாம் நம்மை புதிப்பித்து கொண்டு மீண்டும் தயாராக வேண்டும். கோடைக்காலத்தில் பாருங்கள் மரங்களில் உள்ள இலை எல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு காய்ந்து போய் நின்றாலும் , அதனுள் நம்பிக்கை என்ற வேர் உயிரோடிருக்கும். மீண்டும் மழை வந்தவுடன் ஜெகஜோதியாக பூத்து குலுங்கும்.

           சரி ரெம்ப சீரியசா பேசிட்டேனோ?  ம்….. என்ன செய்ய சில நேரங்களில் இதுவும் அவசியமாகிவிடுகிறது.  அதனால சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுடாதீங்க. மனம் விட்டு சிரியுங்கள், வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

25 comments ஜூலை 9, 2009


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

ஜூலை 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

மேல்