தண்ணீர்…. தண்ணீர்…….
ஆகஸ்ட் 29, 2009
தண்ணியப் பார்த்தாலே கண்மணிக்கு முகமெல்லாம் பளிச்சிடும்(எனக்கும் தான்). சிறு வயதில் சம்மர் லீவு முழுவதையும் தண்ணீரில் மேய்ந்தே அம்மாவை வெறுப்பேத்துவோம். அதனால் கண்மணியை பார்க்க எனக்கு ரெம்பவே பாவமாக இருக்கும். இந்தத்தடவை ஏதாவது நீர்வீழ்ச்சிக்கு கண்டிப்பாக அழைத்து செல்ல வெண்டும் என்று ஒரு முடிவோட தான் ஊருக்கு சென்றேன்.
ஒரு வழியா கொஞ்சம் டிக்கெட்டுகளை பிடித்து சென்றுவிட்டோம். குளிக்க போனா அழகான அறிவிப்பு கண்ணில் பட்டு மெய்சிலிர்க்க வைத்து விட்டது. என்ன இருந்தாலும் நாங்க எல்லாம் rules and regulations ஐ அப்படியே follow பண்ணுவோம்ல. சரி பிற்காலத்தில் உங்களுக்கும் பயன்படும் என்று உங்களுக்காக…
ஜோர இருந்தது அருவி. தண்ணி தட தடன்னு விழும் போது எனக்கு தண்ணி கமகமண்ணு மணக்குற மாதிரி தெரிந்தது. குளிச்சிட்டு மேல வந்து பாத்தபிறகு தான் வாசனையின் ரகசியம் தெரிந்தது , அங்கயும் நிறைய பேரு குளிக்கிறாங்க. அப்புறம் ஜாலியான ஒரு போட்டிங் என்று கண்மணிக்கு ஒரே கொண்டாட்டம்.
Entry Filed under: அனுபவம். .
19 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed



1.
--புவனேஷ்-- | செப்டம்பர் 1, 2009 at 5:53 மு.பகல்
//Dont Bath Using Liqur
யாரவது மது ல குளிப்பாங்களா ?
2.
அடலேறு | செப்டம்பர் 1, 2009 at 7:14 மு.பகல்
ஒரு எந்த ஊரு குந்தவை ?
3.
குந்தவை | செப்டம்பர் 1, 2009 at 11:38 மு.பகல்
//Dont Bath Using Liqur யாரவது மது ல குளிப்பாங்களா ?
நல்ல காலம் மொழிபெயர்த்தீக.
அப்படியா எழுதியிருக்காங்க…..? பாவிங்க.
எனக்கு யாருமே சொல்லல்ல தம்பி.
4.
குந்தவை | செப்டம்பர் 1, 2009 at 11:39 மு.பகல்
//ஒரு எந்த ஊரு குந்தவை ?
வாங்க ஐயா… முடிந்தால் போயிட்டுவாங்க. திருப்பரப்பு.
5.
அடலேறு | செப்டம்பர் 1, 2009 at 1:32 பிற்பகல்
திருப்பரப்பு எங்க இருக்கு
6.
Sriram | செப்டம்பர் 1, 2009 at 2:31 பிற்பகல்
//Dont Bath Using Liqur
யாரவது மது ல குளிப்பாங்களா ?
Athan naanga ellam irukkomla..
7.
குந்தவை | செப்டம்பர் 2, 2009 at 11:09 மு.பகல்
//திருப்பரப்பு எங்க இருக்கு
In kanyakumari district.
8.
குந்தவை | செப்டம்பர் 2, 2009 at 11:16 மு.பகல்
என்ன ஸ்ரீராம் எப்படி இருக்கீங்க? இப்படி பண்ணிட்டீங்களே. உங்க பிளாகக்கூட காணோம்!
//Athan naanga ellam irukkomla..
குளிப்பீங்க…குளிப்பீங்க…
9.
nilapriyan | செப்டம்பர் 5, 2009 at 2:30 பிற்பகல்
நானும் அங்கே போயிருக்கேன்…எனக்கும் இந்த சந்தேகம் வந்தது…எண்ணெய் தேயிச்சு குளிக்கிற மாதிரி இங்க மதுல குளிப்பாங்க போல என்று நினைத்தேன்…அப்போ நான் சின்ன பையன்…நீங்க கோவில்பட்டி யா? ரொம்ப சந்தோசம்…
10.
Krishna | செப்டம்பர் 6, 2009 at 12:49 பிற்பகல்
எப்படி இருக்கீங்க குந்தவை ? விடுமுறை எப்படி இருந்தது ?
இந்தியா வந்த சந்தோஷத்துல நிறைய எழுதுவீங்க ன்னு பார்த்தா… ஒரு குட்டி அப்டேட் குடுத்திருகீங்க ஆரம்பிச்சவுடனே முடிஞ்சிடுச்சே…
11.
குந்தவை | செப்டம்பர் 7, 2009 at 11:54 மு.பகல்
//எனக்கும் இந்த சந்தேகம் வந்தது…எண்ணெய் தேயிச்சு குளிக்கிற மாதிரி இங்க மதுல குளிப்பாங்க போல என்று நினைத்தேன்…
இருந்தாலும் இது ரெம்ப ஓவருங்க.
உங்களுக்கும் கோவில்பட்டியா?
எனக்கு நாகர்கோவில்.
கல்யாணத்திற்கு அப்புறம் கோவில்பட்டி.
12.
குந்தவை | செப்டம்பர் 7, 2009 at 11:59 மு.பகல்
//எப்படி இருக்கீங்க குந்தவை ? விடுமுறை எப்படி இருந்தது ?
நல்லாயிருக்கேன் Krishna.
ஊருல நல்ல enjoy பண்ணினேன், என்னை விட கண்மணி நல்ல enjoy பண்ணினாள்.
//இந்தியா வந்த சந்தோஷத்துல நிறைய எழுதுவீங்க ன்னு பார்த்தா…
நேரமே கிடைக்க மாட்டேன்கிறது எழுதுவதற்கு.
13.
Anand | செப்டம்பர் 10, 2009 at 10:07 பிற்பகல்
//வாசனையின் ரகசியம் தெரிந்தது//
என்னங்க ரகசியம்?? நானும் அங்க போயிருக்கேன்… ஆனா ரகசியம் எல்லாம் ஒன்னும் தெரியல… ஏதோ artificial ன்னு கேள்வி பட்டதோடு சரி… அதுவும் நம்பமுடியல…
14.
குந்தவை | செப்டம்பர் 12, 2009 at 2:28 பிற்பகல்
//என்னங்க ரகசியம்?? நானும் அங்க போயிருக்கேன்… ஆனா ரகசியம் எல்லாம் ஒன்னும் தெரியல… ஏதோ artificial ன்னு கேள்வி பட்டதோடு சரி…
அடடா முழுசா படிக்க மாட்டீங்களா தம்பி.
ஒரு அதிசயமும் கிடையாது , நீர்வீழ்ச்சிக்க மேல நிறைய பேரு குளிச்சிட்டிருந்தாங்க. அந்த சோப்பு வாசனை தான்.
15.
skulandaiswamy | செப்டம்பர் 17, 2009 at 6:09 மு.பகல்
Enjoy the days of homestay! convey my wishes to your family and your husbands family… Especially fr kanmani too
16.
குந்தவை | செப்டம்பர் 17, 2009 at 6:20 மு.பகல்
Really enjoyed. Thank You sir.
17.
பெயரிலி | நவம்பர் 2, 2009 at 5:08 மு.பகல்
//ஒரு வழியா கொஞ்சம் டிக்கெட்டுகளை பிடித்து சென்றுவிட்டோம்//
who r these tickets?
போனா போதுன்னு உங்கள கூட்டிக்கிட்டு போனா அவங்க டிக்கட்டுகளா?
18.
jeno | நவம்பர் 2, 2009 at 5:16 மு.பகல்
ஒரு வழியா கொஞ்சம் டிக்கெட்டுகளை பிடித்து சென்றுவிட்டோம்
//what tickets?
போனா போதுன்னு உங்கள கூட்டிக்கிட்டு போனா நாங்க டிக்கெட்டுகளா?
அடுத்த தடவை ஒரு இடமும் சுத்த முடியாம வீட்டில் இருந்து megaserial பார்க்க வேண்டியதுதான். ஜாக்கிரதை!!!
19.
குந்தவை | நவம்பர் 2, 2009 at 11:27 மு.பகல்
//போனா போதுன்னு உங்கள கூட்டிக்கிட்டு போனா நாங்க டிக்கெட்டுகளா?
ha….ha…ha….
இப்படியா சந்தியில் போட்டு உடைக்கிறது. toooo bad.
//அடுத்த தடவை ஒரு இடமும் சுத்த முடியாம வீட்டில் இருந்து megaserial பார்க்க வேண்டியதுதான். ஜாக்கிரதை!!!
இருந்தாலும் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கக்கூடாது.