கண்மணியின் வால்

ஒக்ரோபர் 20, 2008 at 5:29 முப 13 பின்னூட்டங்கள்

கண்மணி ரெம்ப சேட்டை பண்ணி என்னுடைய பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள். கடுப்பாகி போன நான்

“கண்மணி உனக்கு ரெம்பவெ வால் கூடிப்போயிருச்சி, இரு ரெண்டு அடி போட்டாத்தான் நீ வழிக்கு வருவா ” என்று காச்மூசென்று கத்த ஆரம்பித்தேன்.

” அம்மா இங்க பாரு, எனக்கு வாலே இல்லம்மா ” என்று முகத்தை பாவமாக வைத்து, திரும்பி நின்னு காட்டினாள்.

———————————————–

கண்மணி அப்பா கடைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கண்மணி ” நானும் வருவேன்” என்று அடம்பிடிக்க , “சரி சீக்கிரம் வேறு ட்ரெஸ் மாத்திக்கிட்டு வா” என்று கூறியது தான், பட படவென்று புதுசா ஒண்ண மாட்டிக்கிட்டு ரெடியாகிவிட்டாள்.

” கண்மணி செருப்பு போடலையா?”

” அம்மா வெளியில காரெல்லாம் பாஸ்ட் பாஸ்டா வரும் அப்புறம் பூனையெல்லாம் வரும், கண்மணி சின்ன பிள்ளை இல்லியாமா, அதனால அப்பா என்னிய தூக்கிகிட்டு போவாங்க…..அதான் செருப்பு போடல”

—————————————-

தினமும் என்னை ஆபீஸ் அனுப்பிவிடும் போது கண்மணி கூறுவது

” அம்மா ஆபீஸுக்கு நல்ல பிள்ளையா போயிட்டு வாங்க. கண்மணி ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் ஒரு missed call கொடுப்பேன் , உடனே ஓடீ வந்துடனும் என்ன”

Entry filed under: கண்மணியின் பூங்கா. Tags: .

ஒரு நாள் டீச்சர் டைரி குறிப்பிலிருந்து —-1

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vijay  |  8:15 முப இல் ஒக்ரோபர் 20, 2008

    cho chweet !!

    \\” அம்மா வெளியில காரெல்லாம் பாஸ்ட் பாஸ்டா வரும் அப்புறம் பூனையெல்லாம் வரும், கண்மணி சின்ன பிள்ளை இல்லியாமா, அதனால அப்பா என்னிய தூக்கிகிட்டு போவாங்க…..அதான் செருப்பு போடல”\\

    Suupppeeer !!!

    உங்க பொண்ணு கிட்ட ஜாக்கிரதையாத்தான் பேசணும் போலிருக்கு.

  • 2. Bhuvanesh  |  11:22 முப இல் ஒக்ரோபர் 20, 2008

    உங்கள பாத்த எனக்கு பாவமா இருக்கு! 🙂 kidding 🙂
    கண்மணிக்கு கண்ணு படபோகுது சுத்திபோடுங்க!

  • 3. jeno  |  8:34 முப இல் ஒக்ரோபர் 22, 2008

    குந்தவையின் பதிவுகளில் கண்மணிதான் கதாநாயகி

  • 4. kunthavai  |  5:02 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    ரசித்தமைக்கும் , வருகைக்கும் நன்றி விஜய், புவனேஷ்.

    //குந்தவையின் பதிவுகளில் கண்மணிதான் கதாநாயகி

    குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவோ!

  • 5. BHuvanesh  |  5:40 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    தமிழ் நாட்டில் கதாநாயகர்களை தான் தெய்வமாக பார்பார்கள்! கதாநாயகியை தெய்வம் என்று புரட்சி செய்ததுக்கு வாழ்த்துக்கள்!

  • 6. kunthavai  |  9:00 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    //தமிழ் நாட்டில் கதாநாயகர்களை தான் தெய்வமாக பார்பார்கள்! கதாநாயகியை தெய்வம் என்று புரட்சி செய்ததுக்கு வாழ்த்துக்கள்//

    ஹல்லோ, எந்த ஊரில் இருக்குறீங்க?

    தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எப்பவோ அந்த புரட்சியை நடத்திவிட்டார்கள்.

    எனக்கு தெரிந்து குழந்தைகளை எல்லோரும் தெய்வங்களாக தான் கொண்டாடுகிறார்கள். (அப்புறம் வளர வளர…..வேறு கதையாகிவிடுகிறது. இருந்தாலும், எப்போதும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான்)

  • 7. Bhuvanesh  |  9:49 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    //தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எப்பவோ அந்த புரட்சியை நடத்திவிட்டார்கள்.
    குஷ்பு கோயில் மட்டேரை மறந்துட்டேன்! கருத்து வாபஸ்!!
    //எனக்கு தெரிந்து குழந்தைகளை எல்லோரும் தெய்வங்களாக தான் கொண்டாடுகிறார்கள்.
    குழந்தைகள் அனைவரும் தெய்வம் தன். மாற்றுகருத்து இல்லை !

    // (அப்புறம் வளர வளர…..வேறு கதையாகிவிடுகிறது. இருந்தாலும், எப்போதும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான்)

    கண்மணியை காக்கை குஞ்சு என்று சொல்லாதிர்கள்! She is my Sweet Heart!! 🙂

  • 8. Bhuvanesh  |  9:50 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    //தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எப்பவோ அந்த புரட்சியை நடத்திவிட்டார்கள்.
    குஷ்பு கோயில் மட்டேரை மறந்துட்டேன்! கருத்து வாபஸ்!!
    //எனக்கு தெரிந்து குழந்தைகளை எல்லோரும் தெய்வங்களாக தான் கொண்டாடுகிறார்கள்.
    குழந்தைகள் அனைவரும் தெய்வம் தன். மாற்றுகருத்து இல்லை !

    // (அப்புறம் வளர வளர…..வேறு கதையாகிவிடுகிறது. இருந்தாலும், எப்போதும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான்)

    கண்மணியை காக்கை குஞ்சு என்று சொல்லாதீர்கள்! She is my Sweet Heart!!

  • 9. Bhuvanesh  |  9:51 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    //தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எப்பவோ அந்த புரட்சியை நடத்திவிட்டார்கள்.
    குஷ்பு கோயில் மேட்டேரை மறந்துட்டேன்! கருத்து வாபஸ்!!
    //எனக்கு தெரிந்து குழந்தைகளை எல்லோரும் தெய்வங்களாக தான் கொண்டாடுகிறார்கள்.
    குழந்தைகள் அனைவரும் தெய்வம் தான். மாற்றுகருத்து இல்லை !

    // (அப்புறம் வளர வளர…..வேறு கதையாகிவிடுகிறது. இருந்தாலும், எப்போதும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான்)

    கண்மணியை காக்கை குஞ்சு என்று சொல்லாதீர்கள்! She is my Sweet Heart!!

  • 10. kunthavai  |  10:03 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    என்ன புவனேஷ் ரெம்ப உணர்ச்சி வசப்பட்டு சப்தமா சொல்லிட்டீங்களா,
    உங்க பின்னூட்டம் எக்கோனால மூன்று தடவை வந்து விட்டது.

    //கண்மணியை காக்கை குஞ்சு என்று சொல்லாதீர்கள்! She is my Sweet Heart!!

    அப்படியே ஆகட்டும் தம்பி.

  • 11. Bhuvanesh  |  10:43 முப இல் ஒக்ரோபர் 23, 2008

    ஆர்வகோளறுல முதல் ரெண்டு தட்டி தப்பா சொல்லிட்டேன் அக்கா! ஹாப்பி தீபாவளி! என்ஜாய் பண்ணுங்க!

  • 12. shardha  |  9:49 முப இல் நவம்பர் 12, 2008

    உங்களின் மகளின் பெயர் மிகவும் அழகாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பெயர்.

    அம்மா ஆபீஸுக்கு நல்ல பிள்ளையா போயிட்டு வாங்க. கண்மணி ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் ஒரு missed call கொடுப்பேன் , உடனே ஓடீ வந்துடனும் என்ன”//

    இனறைய தலைமுறை பிள்ளைகள் நல்லா வெவரமாத்தான் வளர்றாங்க போல இருக்கு. நாமத்தான் நம்மை இன்னும் சரியாவே புரிஞ்சுக்கலை.

  • 13. Janu  |  1:06 பிப இல் ஜனவரி 25, 2009

    அன்புக் கண்மணிக்கு,
    I had a great time reading your ‘vaaluthanangal’. But what happened now ?
    இப்ப என்ன பண்றீங்க.. சமர்த்தா ஆயிடீங்களா .. கூடாதே.. கொஞ்சம் வாலுத்தனம் பண்ணுங்களேன்.. எங்களுக்கு அப்ப தான் பொழுது போகும்… உங்க அம்மாவை இப்படி ரெஸ்ட் எடுக்க விடலாமா..கமான் க்விக்..வாலை அவிழ்த்து விடுங்க பார்போம்,

    அன்புடன்,
    ஜானு

    குந்தவை கோச்சுகாதீங்க சரியா 😉

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
ஒக்ரோபர் 2008
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031